15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

விருதுநகர்: அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் திடீர் ஆய்வு; சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!

Date:

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பள்ளியின் சத்துணவு மையத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 293 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தினமும் 60 பயனாளிகளுக்கு மட்டுமே பள்ளியில் மதிய உணவு தயார் செய்யப்பட்டு வழங்கி வந்தது கண்டறியப்பட்டது.

சத்துணவு மையங்கள் (சித்தரிப்பு படம்)

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக உணவுப்பொருள்கள் சத்துணவு மையத்தில் இருப்பு பதிவேடு, ரொக்கப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படாமல் மதிய உணவு தரமற்றதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், காய்கறி சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படாமலும், சத்துணவு அறையின் உள்பகுதி சுகாதாரமற்ற நிலையிலும், சமையல் பாத்திரங்கள் சுத்தமற்ற நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை தயார் செய்து அனுப்பினர். அதன்படி, ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் கவிதா என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പൂനെയില്‍ പൊതുസ്ഥലത്ത് നോമ്പ് തുറക്കുന്നത് ചോദ്യം ചെയ്ത് യുവാക്കളെ ആക്രമിച്ചു; അഞ്ച് പേര്‍ക്ക് പരിക്ക്; 15 പേര്‍ പിടിയില്‍

പൂനെ: പൂനെ അക്‌സര്‍വാഡിയില്‍ കുളത്തിനരികെ നോമ്പ് തുറയ്ക്കായി ഒത്തുകൂടിയ മുസ്‌ലിം യുവാക്കളെ...

“உளவுத் துறையைக் கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவந்த குற்றசெயல்களும், அதை தொடர்ந்து...

Fatty Liver: ఫ్యాటీలివర్ సమస్యతో బాధపడుతున్నారా..? మందులతో పని లేకుండా తగ్గించుకోండిలా..

కాలేయం మన శరీరంలోని అత్యంత కీలకమైన అవయవం. ఇది విషతుల్యాలను తొలగించడం,...