21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

IUML: “அப்படி நீங்களா கற்பனை பண்ணிகிட்டா எப்படி பாய்" – திமுக-வுடன் உறவை முறித்த காதர் மொய்தீன்

Date:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில், சென்னையில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 483 பேர் பங்கேற்ற இக்கூட்டத்தில், 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மொய்தீன், “தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும், மு.க.ஸ்டாலின் அவர்களே மீண்டும் முதலமைச்சராவார் என்று நாங்களும் நம்பினோம், உழைத்தோம்.

ஆனால், தேர்தல் முடிவு வேறாக அமைந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாக்குகளால் ‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ சாதகமான சூழலை உருவாக்கினர்.

திமுக ஸ்டாலின் – இ.யூ.மு.லீக் – காதர் மொய்தீன்

த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முயற்சி செய்தபோது, அவர்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாத நிலை இருந்தது. அந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியோ அல்லது ஆளுநர் ஆட்சியோ வந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

ஜனாதிபதி ஆட்சி அமைந்தால், அது மத்தியிலுள்ள பாஜக-வின் மறைமுக ஆட்சியாகவே மாறும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு, அதற்கு முஸ்லிம் லீக் காரணமாகிவிட்டது என்ற பழி சமுதாயத்தின் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, சமுதாய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து, தவெக ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம்.

தமிழ்நாட்டு வரலாற்றில் தி.மு.க கூட்டணியில் முஸ்லிம் லீக் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்துள்ளது. கடந்த காலங்களில் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில்தான் போட்டியிட்டு வென்றோம். இந்த முறையும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து தீர்மானம் இயற்றியுள்ளோம். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் 28-ல் போட்டியிட்டு 22 இடங்களில் வென்று, வழக்கம்போல 5 அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் நாங்கள் த.வெ.க-விடம் அமைச்சர் பதவி கேட்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.

தவெக அமைச்சரவையில் இ.யூ.மு.லீக்
தவெக அமைச்சரவையில் இ.யூ.மு.லீக்

ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருந்தன்மையோடு எங்களை அமைச்சரவையில் பங்கேற்க அழைத்தார். அகில இந்திய தலைமை மற்றும் கேரள அரசியல் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலோடு, தற்போது த.வெ.க அமைச்சரவையில் முஸ்லிம் லீக் இணைந்துள்ளது. எங்கள் கட்சித் தலைவராக ஏ. பாரூக் அவர்களும், அமைச்சராக ஷாஜகான் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.” என்றார்.

அப்போது செய்தியாளர்கள் ‘திமுக-வுக்கு வாக்களிப்பது 6-வது கடமை’ எனப் பேசியதாக கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து கடமைகள் உள்ளன. ஜனநாயகத்தில் ஆறாவது கடமை ஓட்டு போடுவது என்றுதான் நான் மறைந்த மூத்த தலைவர் எஸ்.எம். பக்கர் கூட்டத்தில் பேசினேனே தவிர, தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமை என்று நான் எப்போதும் கூறவில்லை. ஊடகங்கள் தங்களுக்குத் தகுந்தாற்போல் கற்பனையாகக் கேள்விகளை உருவாக்கக் கூடாது. தற்போதைய த.வெ.க ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.

தவெக அமைச்சரவையில் இ.யூ.மு.லீக்
தவெக அமைச்சரவையில் இ.யூ.மு.லீக்

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் இந்த நல்லாட்சி தொடர, த.வெ.க கூட்டணியோடு இணைந்து முஸ்லிம் லீக் முழு ஒத்துழைப்பை வழங்கும். கூட்டணிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை, பெயர் வைக்கும்போது அதைப் பயன்படுத்துவோம். கடந்த காலங்களில் உள்ளாட்சியில் எங்களுக்குக் கிடைக்காத மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் போன்ற வாய்ப்புகளை இம்முறை த.வெ.க கூட்டணியில் பெற்று சமுதாயத்திற்குப் பாடுபடுவோம்.

முதலமைச்சர் சட்டமன்றத்தில் தேவையான நேரங்களில் பேசித்தான் வருகிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. குறிப்பாக, இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் படை’ போன்ற அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்றும், குற்றங்கள் தடுக்கப்படும் என்றும் நம்புகிறோம். எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலையில்லை, நண்பர்கள் எதைச் சொன்னாலும் பதில் சொல்லாமல் கடந்து போவோம்.

இ.யூ.மு.லீக் - காதர் மொய்தீன்
இ.யூ.மு.லீக் – காதர் மொய்தீன்

முஸ்லிம் லீக் வரலாற்றிலேயே எங்கள் அலுவலகத்திற்கு எந்தவொரு முதலமைச்சரும் வந்ததில்லை. ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆதரவு தந்ததற்காக நேரில் வந்து நன்றி கூற விழைந்தார். தெரு மிகவும் குறுகலானது என்பதால் நான் பலமுறை மறுத்தும், அவர் அனைத்துக் கட்சி அலுவலகங்களுக்கும் செல்வது போல் இங்கும் வருவேன் என்று உறுதியாகக் கூறி வந்தார். அவர் வருவதற்காக, ஒரே இரவில் அலுவலகத்திற்கு வெள்ளை அடித்து, வாடகைக்கு 7, 8 சோபாக்களை வாங்கிப் போட்டு அவரை அமர வைத்தோம். அவர் கிளம்பிய உடனே அந்த சோபாக்கள் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டன. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

மேகதாது என்பது ஒரு ஆடு தாண்டும் அளவிலான சிறிய ஓடைப் பகுதிதான். அங்கு கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர் முழுமையாகத் தடுக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால்தான் தமிழ்நாடு அரசு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பிரதமரைச் சந்தித்து வற்புறுத்த உள்ளோம். இதில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினரும் நேரில் சென்று தமிழகத்தின் குரலை ஒலிப்பார்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ക്രിസ്ത്യന്‍ സാന്നിധ്യം ഇല്ലാതാക്കാനുള്ള ശ്രമം; പള്ളിയുടെ ഭൂമി പിടിച്ചെടുത്ത ഇസ്രഈല്‍ നടപടിക്കെതിരെ ഗ്രീക്ക് ഓര്‍ത്തഡോക്‌സ് പാത്രിയാര്‍ക്കേറ്റ്‌

ജറുസലേം: കിഴക്കന്‍ ജറുസലേമിലെ തങ്ങളുടെ ഉടമസ്ഥതയിലുള്ള ഭൂമി ഇസ്രഈല്‍ അനധികൃതമായി പിടിച്ചെടുത്തതിനെ...

`இந்தியா பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக மாற அனுமதிக்க முடியாது' – மதுரை உயர் நீதிமன்றம்

சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் மற்றும் ராஜராஜேஸ்வரி கிராஃப்ட்ஸ்...

Heavy Rain Alert: ఏపీ వాసులకు వాతావరణ శాఖ బిగ్ అలర్ట్.. ఈ జిల్లాల్లో భారీ వర్షాలు..

Heavy Rain Alert: ఆంధ్రప్రదేశ్ రాష్ట్ర ప్రజలకు వాతావరణ శాఖ తీవ్ర...

ನಮ್ಮಲ್ಲಿ 16 ಟಿಎಂಸಿ ಮಾತ್ರ ನೀರಿದೆ: ತಮಿಳುನಾಡಿಗೆ ನಿಗದಿಯಷ್ಟು ಕೊಡೋಣ- ಸಚಿವ ರಾಮಲಿಂಗರೆಡ್ಡಿ

ಬೆಂಗಳೂರು,ಜೂನ್,20,2026 (www.justkannada.in):  ರಾಜ್ಯದಲ್ಲಿ ಈ ಬಾರಿ ಮುಂಗಾರು ಮಳೆ ನಿರೀಕ್ಷಿತ...