28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி – மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

Date:

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதமலை சுற்றுவட்டாரங்களில் ஒரு ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வருகிறது.

ரோலக்ஸ் யானை

விளை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்தப்படுவதுடன், அவ்வபோது மனிதர்களையும் தாக்கி கொல்வதாக புகார் எழுந்தது. அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டனர்.

விவசாயிகள் கோரிக்கையால் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக வனத்துறையினர் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து நரசிம்மன், முத்து என்கிற 2 கும்கி யானைகளை அழைத்து வந்திருந்தனர். வன மருத்துவர் விஜய ராகவன், கடந்த மாதம் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார்.

நரசிம்மன் யானை
முத்து யானை

அப்போது அந்த யானை அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு காரணமாக ‘ஆபரேஷன் ரோலக்ஸ்’ தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டுக்கும் திடீரென மதம் பிடித்தது. இதனால் அந்த யானைகள் பாதுகாப்பு கருதி, அந்த இரண்டு யானைகளும் மீண்டும் டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டன. அவற்றுக்கு பதிலாக டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னத்தம்பி கும்கி யானை கோவை வரவழைக்கப்பட்டுள்ளது.

கபில் தேவ் யானை
சின்னத்தம்பி யானை

ஏற்கனவே கபில்தேவ் என்கிற கும்கி யானையும் கோவை அழைத்து வரப்பட்டுள்ளது. இந்த 2 யானைகள் மூலம் ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்கும் முயற்சி நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಉಪಚುನಾವಣೆ: ಎರಡೂ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ  ನಾವೇ ಗೆಲ್ಲುತ್ತೇವೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,27,2026 (www.justkannada.in): ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಬಂಡಾಯವೆದ್ದಿದ್ದ ಸಾಧಿಕ್ ಪೈಲ್ವಾನ್...

നേപ്പാള്‍ ജെന്‍ സി കലാപം അടിച്ചമര്‍ത്തി; മുന്‍ പ്രധാനമന്ത്രി കെ.പി ശര്‍മ ഒലി അറസ്റ്റില്‍

കാഠ്മണ്ഡു: നേപ്പാളില്‍ ജെന്‍ സി പ്രക്ഷോഭം അടിച്ചമര്‍ത്താന്‍ ശ്രമിച്ചെന്ന പരാതിയില്‍ മുന്‍...

ஈரான் போர்‌ குறித்து மோடி – ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! – சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது.ஈரான்‌ போர் குறித்து...

Aloo Roti Recipe: ఆలూ రోటీ ఇలా ప్రయత్నించండి.. పిల్లలు, పెద్దలు లొట్టలేసుకుంటూ తింటారు..

Aloo Roti Recipe: ప్రతిరోజూ ఒకే రకమైన బ్రేక్‌ఫాస్ట్‌ అల్పాహారం తింటూ...