17
March, 2026

A News 365Times Venture

17
Tuesday
March, 2026

A News 365Times Venture

"2014-ல் நான் கண்ட கனவு இதுதான்" – பிரதமர் மோடியின் உரை

Date:

மராட்டிய மாநிலம், நவிமும்பையில் ரூ.19650 கோடி செலவில் தாமரை வடிவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, “ஹவாய் செருப்புப் போடும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்று 2014-ல் நான் கனவு கண்டேன். இதை நிறைவேற்ற, நாடு முழுக்க பல விமான நிலையங்களை கட்டவேண்டியது முக்கியம் என உணர்ந்தேன். 2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்களே இருந்தன; தற்போது இந்த எண்ணிக்கையை 160-க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளோம்.

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியாவை உலகளாவிய விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (MRO) மையமாக மாற்றுவதே நமது இலக்கு.

நவி மும்பை விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக இருக்கும். இன்று, மும்பை முழுவதும் எளிதாகப் பயணிக்க நகரம் முழுவதும் நிலத்திற்கு அடியே செல்லும் மெட்ரோ சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை போன்ற ஒரு நகரத்தில் இவ்வளவு கவனமாக கட்டுமானத்துடன் நிலத்தடி மெட்ரோவைத் தொடங்குவது ஒரு பெரிய சாதனை.

பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க ஜிஎஸ்டி சீர்திருத்தம் வழிவகை செய்துள்ளது; இதனால் இந்த நவராத்திரியில் மக்களின் செலவு விகிதம் உயர்ந்துள்ளது உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்; ஏனெனில் இந்திய பணத்தை நாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.

பிரதமர் மோடி

காங்கிரஸின் பலவீனம், பயங்கரவாதிகளை பலப்படுத்தியது. இந்தத் தவறுக்காக நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எங்களை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை.” என்று பேசியிருக்கிறார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸರ್ಕಾರಿ ಆಸ್ಪತ್ರೆಗಳಲ್ಲಿ ಔಷಧಿಗಳ ಕೊರತೆ ಆಗದಂತೆ ಕ್ರಮ- ಸಚಿವ ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,17,2026 (www.justkannada.in): ಸರ್ಕಾರಿ ಆಸ್ಪತ್ರೆಗಳಲ್ಲಿ ಔಷಧಿಗಳ ಕೊರತೆ ಆಗದಂತೆ ಕ್ರಮ...

ഇറാനിലെ റാലികള്‍ എ.ഐ ആണെന്ന ട്രംപിന്റെ വാദം പെഹ്‌ലവിയുടേതിന് സമാനം; പരിഹസിച്ച് ലാരിജാനി

ടെഹ്‌റാന്‍: ഇറാനിലുടനീളം അടുത്തിടെയുണ്ടായ യു.എസ്-ഇസ്രഈലി വിരുദ്ധ പ്രതിഷേധങ്ങള്‍ എ.ഐ ഉപയോഗിച്ച് നിര്‍മിച്ചതാണെന്ന...

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' – அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட...

Jeevan Reddy: నేను పార్టీ వీడతానని సంజయ్‌కు చెప్పానా?.. మా పార్టీలోకి వచ్చి చిచ్చు పెట్టాడు!

తనతో కలిసి పనిచేయాలని జగిత్యాల ఎమ్మెల్యే సంజయ్ కుమార్ తనకు ఆఫర్...