29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

“எனது அமைதி வெற்றிக்கான அறிகுறி" – சொல்கிறார் செங்கோட்டையன்

Date:

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவியைப் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் அமைதி காத்து வருகிறார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “கட்சியின் எதிர்கால நலன் கருதியே அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினேன். ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என் ஆதரவாளர்கள் நீக்கப்படுவதை அவர்கள் செய்துகொண்டேதான் இருப்பார்கள். ஆனால், விரைவில் நன்மை நடக்கும். அவர்களது நடவடிக்கை அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது; தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனது அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி. ஒருங்கிணைப்பு குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வருகை குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அன்று நான் சென்னை சென்று விட்டேன். எனக்கு வழிகாட்டி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாதான். அவர்கள் வழியில் நான் பயணித்து வருகிறேன்” என்றார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಪತಿ ಮರಣದ ನಡುವೆಯೂ ಕರ್ತವ್ಯ ನಿಭಾಯಿಸಿದ ಶಿಕ್ಷಕಿ: ಶಾಸಕರಿಂದ ಶ್ಲಾಘನೆ

  ಮೈಸೂರು, March.29,2026: ವೈಯಕ್ತಿಕ ದುಃಖದ ನಡುವೆಯೂ ಕರ್ತವ್ಯಕ್ಕೆ ಆದ್ಯತೆ ನೀಡಿದ...

കോണ്‍ഗ്രസ് ചെലവാക്കിയതിനേക്കാള്‍ അഞ്ചിരട്ടി പണം ബി.ജെ.പി കേരളത്തിനായി ചെലവിട്ടു; വികസനത്തിനുള്ള പണം സര്‍ക്കാര്‍ കൊള്ളയടിച്ചു: മോദി

പാലക്കാട്: കേരളത്തില്‍ ബി.ജെ.പി സര്‍ക്കാരുണ്ടാക്കുമെന്ന അവകാശവാദവുമായി പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദി. പാലക്കാട്...

தவெக: '24 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' – விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று...

Rain Alert: రెయిన్ అలర్ట్.. రేపటి నుంచి ఈ ప్రాంతాల్లో భారీ వర్షాలు..

తెలంగాణ రాష్ట్రవ్యాప్తంగా గత కొన్ని రోజులుగా భానుడి భగభగలతో అల్లాడిపోతున్న ప్రజలకు...