1
May, 2026

A News 365Times Venture

1
Friday
May, 2026

A News 365Times Venture

Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' – முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்கள்!

Date:

தமிழ் நாட்டில் சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது.

ரேஷன் கடைகளுக்கு கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருள்கள் வாங்கி வரவேண்டும்.

இல்லம் தேடி ரேஷன்

இதில் மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மட்டும் தங்களின் சார்பில் வேறு ஒருவரை ரேஷன் கடைக்கு அனுப்பி ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள விலக்கு அளிக்கப்பட்டது. எனவே, முதல்கட்டமாக இல்லம் தேடி ரேஷன் திட்டம் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள்களை வழங்க அரசு முடிவு செய்தது.

முதல்கட்டமாக சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனை முயற்சியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. வரும் சுதந்திர தினம் அல்லது செப்டம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் பொருள்கள் நேரடியாக வினியோகம் செய்யப்படலாம் என்றும், மாதந்தோறும் ரேஷன் பொருள்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று விடும் என்றும் கூறப்படுகிறது.

இல்லம் தேடி ரேஷன்
இல்லம் தேடி ரேஷன்

வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை கொண்டு செல்லும் திட்டம் ஆந்திராவில் செயல்பாட்டில் இருந்தது. அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு இல்லம் தேடி ரேஷன் திட்டத்தை தொடங்கி செயல்படுத்த முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മാധ്യമസ്വാതന്ത്ര്യ സൂചികയില്‍ വീണ്ടും തിരിച്ചടി; 153ാം സ്ഥാനത്തുള്ള പാകിസ്ഥാനും പിന്നില്‍ ഇന്ത്യ

ന്യൂദല്‍ഹി: ലോക മാധ്യമസ്വാതന്ത്ര്യ സൂചികയില്‍ ഇന്ത്യക്ക് വീണ്ടും തിരിച്ചടി. റിപ്പോര്‍ട്ടേഴ്സ് വിത്തൗട്ട്...

திக் திக்… மூடில் திமுக தலைமை… ''என்னதான் ஆச்சு?!"

“தேர்தல் களம் என்றால் தி.மு.க-வினரை போல சுற்றி சுழன்று பணியாற்றுபவர்கள் இருக்க...

Pension Hike: పెన్షనర్లకు కేంద్రం శుభవార్త.. రూ. 7,500లకు పెరగనున్న కనీస పెన్షన్..?

రిటైర్మెంట్ తర్వాత గౌరవప్రదమైన జీవితాన్ని గడపడానికి పెన్షన్ అనేది ప్రధాన ఆధారం....

ಖರ್ಗೆ ಅವರೇ ಪಕ್ಷದ ಸುಪ್ರೀಂ: ರಾಜ್ಯದಲ್ಲಿ ಯಾವ ಬದಲಾವಣೆ ಇಲ್ಲ- ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್

ವಿಜಯಪುರ,ಮೇ1,2026 (www.justkannada.in): ಸದ್ಯಕ್ಕೆ ಸಿಎಂ ಬದಲಾವಣೆ ಇಲ್ಲ ಎಂಬ ಎಐಸಿಸಿ...