13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

“எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இப்படி பேசுகிறார்'' – செல்லூர் ராஜூ

Date:

மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, “அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தால் அனைவரும் வேதனையில் உள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

பாஜக, அதிமுக கூட்டணி குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அது குறித்த கேள்விகளை எங்கள் பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். அமித்ஷாவிடம் பேசியதையும், கூட்டணி குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக பேசியுள்ளார்.

ஒரு முன்னாள் அமைச்சரை தரக்குறைவாகவும், கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஸ்டாலினுக்கு மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

தமிழக மக்கள் இவர் பேச்சை கடுமையாக கண்டித்து வருகிறார்கள், இந்த போக்கை முதல்வர் மாற்றிக் கொள்ள வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீது நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரை அழகாக காட்சியளிக்க, 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள்தான் காரணம். மன்னர்கள் காலத்திற்குப் பிறகு குடிமராமத்து திட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார்.

அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்குத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செய்து வருவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும், மத்திய அரசின் திட்டங்களுக்குதான் திமுக அரசு தனது லேபிளை ஒட்டி வருகிறது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನನ್ನನ್ನು ಬೆಳೆಸಿದಂತೆ ಯತೀಂದ್ರರನ್ನು ರಾಜಕೀಯವಾಗಿ ಬೆಳೆಸಿ-ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್13,2026 (www.justkannada.in):  ರಾಜಕೀಯವಾಗಿ ನನ್ನನ್ನು ಬೆಳೆಸಿದಂತೆ ಪುತ್ರ ಯತೀಂದ್ರರನ್ನು ಬೆಳೆಸುವಂತೆ...

കടന്നുവന്ന കനല്‍വഴികള്‍ മറ്റുള്ളവര്‍ മറന്നാലും ഞാന്‍ മറക്കില്ല; എന്റെ ചോരവീണ മണ്ണില്‍ തലയുയര്‍ത്തിത്തന്നെ നില്‍ക്കും: കെ. സുധാകരന്‍

കണ്ണൂര്‍: നിയമസഭാ സ്ഥാനാര്‍ത്ഥി നിര്‍ണയത്തിലെ അതൃപ്തി പരസ്യമാക്കി കോണ്‍ഗ്രസ് നേതാവ് കെ.സുധാകരന്‍....

பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்… வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09

பரிசுகளால் வளைக்கப்பட்ட வாக்காளர்கள்நினைவுச் சுவடுகள்தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு,...