23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

“தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' – நேபாளம் அறிக்கை!

Date:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பத்திரிகை செய்தியில்,

“ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாளி உட்பட அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரைப் பறித்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் மோதல் குறித்து நேபாளம் மிகுந்த கவலைகொள்கிறது.

தீவிரவாத தாக்குதல் நடந்த துயரமான நேரத்தில் இந்தியாவும் நேபாளம் ஒன்றுபட்டு நின்று துயரத்தைப் பகிர்ந்துகொண்டன.

இந்தியா-நேபாளம்

நேபாளம் உடனடியாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தது, இதன் மூலம் அனைத்து வகையான பயங்கரவாதத்துக்கும் எதிராக நிற்கும் எங்கள் உறுதிப்பாட்டை நினைவுகூரலாம். தீவிரவாதத்துக்கு எதிரான சண்டையில் நேபாளம் முழுமையாக உடன் நிற்கிறது.

எங்கள் கொள்கை நிலைப்பாட்டின் படி, எங்கள் அண்டைநாட்டுக்கு எதிராக எந்த ஒரு விரோத சக்தியும் எங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

பதற்றத்தைத் தணித்து பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಿಎಂ  ಪತ್ರಕ್ಕೆ ಸ್ಪಂದನೆ: ಹೆಚ್ಚುವರಿ 20% ಸಿಲಿಂಡರ್  ಪೂರೈಕೆಗೆ ಕೇಂದ್ರ ಒಪ್ಪಿಗೆ – ಸಚಿವ ಕೆ.ಎಚ್ ಮುನಿಯಪ್ಪ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್, 23,2026 (www.justkannada.in): ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಬರೆದ 2ನೇ ಪತ್ರಕ್ಕೆ...

യു.എസ് അധിനിവേശത്തെ പ്രതിരോധിക്കാന്‍ ക്യൂബ സജ്ജം; ലോകസാഹചര്യങ്ങള്‍ അവഗണിക്കുന്നത് നിഷ്‌കളങ്കതയെന്ന് വിദേശകാര്യമന്ത്രി

ഹവാന: അമേരിക്കയില്‍ നിന്നുള്ള ഏത് സൈനിക ആക്രമണങ്ങളെയും നേരിടാന്‍ സജ്ജമാണെന്ന് ക്യൂബ....

தொகுதி மாறும் அமைச்சரின் மகன்; வலுப்பெறும் அதிமுக! – திண்டுக்கல் மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...

LPG crisis India: వంటగ్యాస్‌లో కొత్త మార్పు.. ఇకపై, 14.2 కేజీల సిలిండర్‌కు బదులుగా, 10 కేజీల సిలిండర్!

మధ్యప్రాచ్య సంక్షోభం, తరిగిపోయిన దేశీయ నిల్వలు, తగ్గిన దిగుమతుల కారణంగా, ప్రభుత్వ...