26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

இந்தி திணிப்பு: "மகாராஷ்டிராவில் அஞ்சும் பட்னாவிஸ்; மோடி பதிலளிக்க வேண்டும்" – ஸ்டாலின் ட்வீட்!

Date:

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிக்கப்பட்டதாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

பின்னர், “மும்மொழிக் கொள்கையின்படி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். அவை தமிழ், குஜராத்தி என எந்த மொழியாகவும் இருக்கலாம். இந்தி திணிக்கப்படவில்லை” என விளக்கம் அளித்தார்.

பட்னாவிஸ்

இந்த நிலையில், மராட்டியத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எழுந்த எதிர்ப்பைச் சுட்டிக்காட்டி, மத்திய கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது குறித்த அவரது சமூக வலைதள பதிவில், “மூன்றாவது மொழியாக இந்தியைத் திணித்ததற்கு பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இப்போது அங்கு மராத்தி மட்டுமே கட்டாயம் என்று கூறுகிறார்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்கள் பரவலாக கண்டனம் தெரிவித்ததால், அவர் அடைந்துள்ள அச்சத்தின் வெளிப்பாடே இது.

மாண்புமிகு பிரதமரும் கல்வி அமைச்சரும் இந்த விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு
இந்தி திணிப்பு எதிர்ப்பு

* தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மராத்தி தவிர, மூன்றாவது மொழியாக வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?

* அப்படியானால், புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா?

* கட்டாய மூன்றாம் மொழி கற்பித்தலுக்கு மாநிலம் குழுசேர வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திடீரென டிஜிபி அலுவலகத்தில் விஜய்; யார் மீது புகார் கொடுத்தார்? – விவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் திடீரென சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று...

Delhi Metro: ఢిల్లీ మెట్రో స్టేషన్‌లో పేలుడు.. బెంబేలెత్తిపోయిన ప్రయాణికులు

దేశ రాజధాని ఢిల్లీ మెట్రో స్టేషన్‌లో భారీ పేలుడు సంభవించింది. దీంతో...

ಪಾಲಿಕೆಯ 2026-27ನೇ ಆಯವ್ಯಯವು ‘ಸತ್ವ ಇಲ್ಲದ ಬಜೆಟ್’- ಮಾಜಿ ಮೇಯರ್ ಶಿವಕುಮಾರ್  ಟೀಕೆ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,26,2026 (www.justkannada.in): ಜನಸ್ನೇಹಿ ಪಾದಚಾರಿ ಮಾರ್ಗಗಳ ಅಭಿವೃದ್ಧಿಗೆ 10 ಕೋಟಿ...