25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

`மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்த ஒரே தலைவர் கலைஞர்தான்' – உதயநிதி ஸ்டாலின்

Date:

வக்ஃபு வாரியம் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

அதில், “உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துகள். நான் ரமலான் வாழ்த்து சொல்வது பலருக்குக் கோபம் வரும். இன்னும் நூறு முறைகூட மீண்டும் மீண்டும் ரமலான் வாழ்த்தைச் சொல்வோம். இன்றைக்கு சிறுபான்மையினர் சொந்த வீடுபோல் இருக்கிற மாநிலம் ‘தமிழ்நாடு’தான் என்று தைரியமாகச் சொல்லலாம். ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ இஸ்லாமியர்களின் அன்பைப் பெற்று செயலாற்றி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்

காயிதே மில்லத் – கலைஞர் இருவருக்கும் இருந்த நட்பைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஒன்றிய ‘பா.ஜ.க’ தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவந்து தொடர்ந்து சிறுபான்மையினருக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த வண்ணமிருக்கிறது.

இந்தியாவிலேயே அதை உறுதியுடன் எதிர்த்து நிற்பது ‘தி.மு.க’தான், தமிழ்நாடு மாநிலம்தான். இன்றைக்குப் புதிதாக ‘வக்ஃபு வாரிய திருத்த மசோதா’ வை நடமுறைப்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது.

உதநிதி ஸ்டாலின், கலைஞர் சிலை

சாதிகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வழக்கம். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்த இந்தியாவின் ஒரே தலைவர் கலைஞர்தான். இஸ்லாமியர்களின் நலனுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அதே உணர்வோடுதான் நாங்களும், நம் முதல்வரும் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், நீங்களும் எங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

52dB ANC, 54 గంటల బ్యాటరీ బ్యాకప్‌తో భారత్‌లో లాంచ్ అయిన OnePlus Nord Buds 4.. ధర ఎంతంటే.?

OnePlus Nord Buds 4 Launched: ప్రముఖ స్మార్ట్‌ఫోన్ తయారీ సంస్థ...

ರೈತರ ಹಿತರಕ್ಷಣೆಗೆ ಮೂರೂ ರಾಜ್ಯಗಳ ಒಮ್ಮತದ ಐತಿಹಾಸಿಕ ತೀರ್ಮಾನ: ಸಿಎಂ ಡಿ.ಕೆ. ಶಿವಕುಮಾರ್

ಕೊಪ್ಪಳ, ಜೂನ್,25,2026 (www.justkannada.in):  “ತುಂಗಭದ್ರಾ ನದಿ ಪಾತ್ರದ ರೈತರ ಹಿತರಕ್ಷಣೆಗೆ...

അയോധ്യ ഫണ്ട് തട്ടിപ്പ്; കുറ്റക്കാരെ മുഴുവന്‍ ശിക്ഷിക്കണമെന്ന് വി.എച്ച്.പി

ന്യൂദല്‍ഹി: അയോധ്യയിലെ രാമക്ഷേത്രത്തിന് ലഭിച്ച സംഭാവനകളുടെ തട്ടിപ്പ് സംബന്ധിച്ച് എഫ്.ഐ.ആര്‍ രജിസ്റ്റര്‍...

பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' – சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி...