இன்று சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று – சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்.
இந்தத் திட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் தொடங்கி வைக்கிறார் விஜய்.
சிங்கப் பெண் அதிரடிப் படை திட்டத்தின் நோக்கம் – தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது ஆகும்.
இந்தத் திட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் சம்பந்தமான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு பிரத்யேக காவல் படையை உருவாக்கப்பட உள்ளது.
இந்தப் படையில் ஐஜியாக பவானீஸ்வரி ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ செய்யுங்க.





