28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

`கோயில் சொத்துகள் பத்திரப் பதிவு' தமிழக அரசின் அரசாணைக்கு தடை! – உயர் நீதிமன்றம் உத்தரவு

Date:

கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பதிவுத்துறை

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில்,

“கோயில்களுக்கு சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோயில் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்யும் வகையில் தமிழ்நாடு வருவாய்த்துறை புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பட்டா நிலம், மானிய நிலம், ஊழிய நிலம் என்ற வகைப்பாடுகளில் கோயில் நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் கோயில் சொத்துகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, தமிழக வருவாய்த்துறை, வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை செயலாளர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇറാനിലെ കരയുദ്ധം അമേരിക്കയെ ചെളിക്കുണ്ടിലാക്കും; വിയറ്റ്നാം ആവര്‍ത്തിക്കുമെന്ന മുന്നറിയിപ്പുമായി റഷ്യ

മോസ്‌കോ: ഇറാനെതിരായ ഏതൊരാക്രമണത്തിന്റെയും വിധി പരാജയമായിരിക്കുമെന്ന് അമേരിക്കയ്ക്ക് മുന്നറിയിപ്പുമായി റഷ്യന്‍ സുരക്ഷാ...

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி...

India Receives Good News Amid Conflict: యుద్ధం మధ్యలో భారత్‌కు శుభవార్త..

India Receives Good News Amid Conflict: మధ్యప్రాచ్యంలో కొనసాగుతున్న యుద్ధ...

ಉಪಚುನಾವಣೆ: ಎರಡೂ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ  ನಾವೇ ಗೆಲ್ಲುತ್ತೇವೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,27,2026 (www.justkannada.in): ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಬಂಡಾಯವೆದ್ದಿದ್ದ ಸಾಧಿಕ್ ಪೈಲ್ವಾನ್...